திங்கள், 4 ஏப்ரல், 2011

மயிலணி மகாவித்தியாலய


மயிலணி மகாவித்தியாலய : இல்ல மெய்வல்லுனர் போட்டி

யாழ் மயிலணி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று சனிக்கிழமை (19.2.2011) வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
வித்தியாலய முதல்வர் சிவநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டார்.
பாண்ட் வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டதை; தொடர்ந்து மங்கள விளக்கேற்றி இறைவணக்கம் செலுத்தப்பட்டு தேசியக் கொடி, பாடசாலைக் கொடி என்பன ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றல் மற்றும் அணிநடையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து பிரதம விருந்தினர் போட்டிகளை ஆரம்பித்து வைக்க மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இறுதியில் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் வித்தியாலய முதல்வ சிவநேசன், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக