திங்கள், 4 ஏப்ரல், 2011

கோப்பாய் மகாவித்தியாலய


கோப்பாய் மகாவித்தியாலய மெய்வல்லுனர் போட்டி

- பாலகுமார், சாந்தரூபன் - யாழ் கோப்பாய் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு (16.2.2011) வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் எஸ். புஸ்பராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக கோப்பாய் கோட்டக் கல்விப் பணிப்பாளர் வே.பாலசுப்பிரமணியமும், சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முதல்வர் வி.கே. கணபதிப்பிள்ளையும் கலந்துகொண்டனர்.
பாண்ட் வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டததை; தொடர்ந்து மங்கள விளக்கேற்றி இறைவணக்கம் செலுத்தப்பட்டு தேசியக் கொடி, பாடசாலைக் கொடி என்பன ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றல் மற்றும் அணிநடையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
வள்ளுவர் இல்லம், கம்பர் இல்லம் மற்றும் பாரதி இல்லங்கள் முறையே முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.
இறுதியில் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில், பாடசாலை முதல்வர் எஸ்.புஸ்பராசா, ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக