திங்கள், 4 ஏப்ரல், 2011

கைதடி முத்துக்குமாரசுவாமி


கைதடி முத்துக்குமாரசுவாமி மெய்வல்லுனர் போட்டி

- கார்த்திகா, ஜெயந்தி - யாழ் கைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு (18.2.2011) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
வித்தியாலய முதல்வர் சி.பவளகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக நிர்வாக வளங்கள் இணைப்பாளர் திலகநாயகம் போல் பிரியவத்சலனும், சிறப்பு விருந்தினராக தென்மராட்சிக் கோட்ட உடற் பயிற்சி உதவிக் கல்விப் பணிப்பாளர் த.சிவகுமாரும் கலந்துகொண்டனர்.
பாண்ட் வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டததை; தொடர்ந்து மங்கள விளக்கேற்றி இறைவணக்கம் செலுத்தப்பட்டு தேசியக் கொடி, பாடசாலைக் கொடி என்பன ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றல் மற்றும் அணிநடையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
முத்துக்குமாரசுவாமி இல்லம், சின்னையா இல்லம் மற்றும் குருசாமி இல்லங்கள் முறையே முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.
இறுதியில் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில், பாடசாலை முதல்வர், சி.பவளகுமாரன், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக