திங்கள், 4 ஏப்ரல், 2011

யாழ் சாவகச்சேரி டிறிபேக்


யாழ் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியின் மெய்வல்லுனர் போட்டி

யாழ் சாவகச்சேரி றிபேக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு (9.2.2011) கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் அருந்தவபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண விளையாட்டு கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் கலந்துகொண்டார்.
விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தேசியக்கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து இல்லங்களின் தலைவர்களினால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.
இதன் பின்னர் பிரதம விருந்தினர் எல்.இளங்கோவன் விளையாட்டுக்களை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இல்ல மெய்வல்லுனர் போட்டிகளில் ஆபிரகாம் இல்லம், சின்னத்தம்பி இல்லம், றிபேக் இல்லம் மற்றும் ஹன்ற் இல்லங்கள் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.
இறுதியாக போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்க கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில், கல்லூரி முதல்வர் அருந்தவபாலன், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக