திங்கள், 4 ஏப்ரல், 2011

யாழ் இந்து


யாழ் இந்து மெய்வல்லுனர் போட்டி

- சாந்தரூபன் - யாழ் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு (24.2.2011) கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் வீ.கணேசராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ் வலயக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் சண் தயாளனும், கௌரவ விருந்தினராக வைத்தியக் கலாநிதி த.துஸ்யந்தனும் கலந்துகொண்டனர்.
பாண்ட் வாத்திய இசையுடன் விருந்தினர்கள் மைதானத்துக்கு அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றி இறைவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, தேசியக் கொடி, பாடசாலைக் கொடி என்பன ஏற்றப்பட்டு, ஒலிம்பிக் தீபம் ஏற்றல் மற்றும் அணிநடையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
ஓட்டம், குண்டெறிதல், தடை தாண்டல், அஞ்சலோட்டம், பழைய மாணவர்களுக்கான அஞ்சலோட்டம், ஆசிரியர்களுக்கான அஞ்சலோட்டம், ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்களுக்கான ஓட்டம் மற்றும் அலுவலர் விருந்தினர் ஆகியோருக்கான விளையாட்டுப் போட்டிகள் உட்பட பல விளையாட்டுக்கள் நடைபெற்றன.
இம்முறை போட்டியில் முதலாம் இடத்தினை பசுபதி இல்ல்மும், இரண்டாம் இடத்தினை நாகலிங்கம் இல்லம் மற்றும் செல்லத்துரை இல்லங்களும், மூன்றாம் இடத்தை காசிப்பிள்ளை இல்லமும் நான்காம் இடத்தினை சபாபதி இல்லமும் பெற்றுக்கொண்டன.
தொடர்ந்து போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக