திங்கள், 4 ஏப்ரல், 2011

நாவற்குழி மகாவித்தியாலய மெ


நாவற்குழி மகாவித்தியாலய மெய்வல்லுனர் போட்டி

- கார்த்திகா, ஜேயந்தி  - யாழ் நாவற்குழி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு (14.2.2011) வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் திருமதி வ.மேகலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக தென்மராட்சி கல்வி வலய உடற் கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் த.சிவகுமார் கலந்துகெண்டார்.
பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டதையடுத்து, மங்களவிளக்கேற்றல், இறைவணக்கம் செலுத்தப்பட்டு தேசியக் கொடியேற்றல், இல்லக் கொடியேற்றலைத் தொடர்ந்து பாடசாலைக் கீதம், ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதையடுத்து மாணவர்களின் அணிநடையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
முதன்மை விருந்தினர் விளையாட்டுக்களை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இடைவேளை நிகழ்வாக பாடசாலை மாணவர்களின் இசை நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்து பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சங்கீதக் கதிரைப் போட்டி நடைபெற்றது.
சுந்தரர் இல்லம், சம்பந்தர் இல்லம் மற்றும் ,அப்பர் இல்லங்கள் முறையே முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.
இறுதியாக போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக