திங்கள், 4 ஏப்ரல், 2011

நெல்லியடி மத்திய மகாவித்தியால


நெல்லியடி மத்திய மகாவித்தியாலய மெய்வல்லுனர் போட்டி

யாழ் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை(13.2.2011) பிற்பகல் 1.30 மணிக்கு வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றி, இறைவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, தேசியக் கொடியேற்றல், இல்லங்களின் கொடியேற்றல் நடைபெற்று, பின்னர், பாடசாலைக் கீதம் இசைக்கப்பட்டது.
ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதையடுத்து மாணவர்களின் அணிநடையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
வித்தியாலய முதல்வர் எஸ்.சேதுராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முதன்மை விருந்தினராக பத்தன ஸ்ரீபாத தேசியக் கல்வியற் கல்லூரியின் அதிபர் ஆறுமுகம் சுந்தரலிங்கம் கலந்துகொண்டார்.
முதன்மை விருந்தினர் விளையாட்டுக்களை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இடைவேளை நிகழ்வாக மாணவர்களின் இசை நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்து, பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சங்கீதக் கதிரைப் போட்டி நடைபெற்றது.
இளங்கோ இல்லம், வள்ளுவன் இல்லம், கம்பன் இல்லம், பாரதி இல்லங்கள் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.
இறுதியில் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக