திங்கள், 4 ஏப்ரல், 2011

வைத்தீஸ்வராக் கல்லூரி


யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியின் மெய்வல்லுனர் போட்டி

யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு (11.2.2011) கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் மு. மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முதன்மை விருந்தினராக அஷ்ரன் பதிப்பக உரிமையாளர் தி. லோகநாதனும், சிறப்பு விருந்தினராக யாழ் கொக்வில் ஸ்தான தமிழ்க் கலவன் பாடசாலை ஆசிரியர் திருமதி யோ.திரவியநாதனும்  கலந்துகொண்டனர்.
விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம் மற்றும் கல்லூரிக் கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தேசியக்கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து இல்லங்களின் தலைவர்களினால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
விவேகானந்தா இல்லம், விபுலானந்தா இல்லம், நாகமுத்து இல்லம் மற்றும் சர்வானந்தா இல்லங்கள் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.
இறுதியாக போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில், கல்லூரி முதல்வர் மு.மகேந்திரன், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக