திங்கள், 4 ஏப்ரல், 2011

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய


நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய மெய்வல்லுனர் போட்டி

யாழ் நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி வியாழக்கிழமை (24.2.2011) வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் சத்தியவரதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் கலந்துகொண்டார்.
பாண்ட் வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டததை; தொடர்ந்து மங்கள விளக்கேற்றி இறைவணக்கம் செலுத்தப்பட்டு தேசியக் கொடி, பாடசாலைக் கொடி என்பன ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றல் மற்றும் அணிநடையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
நிகழ்வின் இறுதியில் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக