திங்கள், 4 ஏப்ரல், 2011

யாழ் வேம்படி மகளிர்


யாழ் வேம்படி மகளிர் பாடசாலை மெய்வல்லுனர் போட்டி: ஸ்கோக்ற்றவற் வென்றது

யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு (13.2.2011) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை மாணவிகளின் பாண்ட் வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டதையடுத்து, மங்களவிளக்கேற்றல், இறைவணக்கம் செலுத்தப்பட்டு தேசியக் கொடியேற்றல், இல்லக் கொடியேற்றலைத் தொடர்ந்து பாடசாலைக் கீதம், ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதையடுத்து மாணவர்களின் அணிநடையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பாடசாலை முதல்வர் திருமதி க.பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முதன்மை விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் பேராசிரியர் நா. சண்முகலிங்கன் மற்றும் யாழ்;ப்பாண மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
முதன்மை விருந்தினர் விளையாட்டுக்களை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
ஓட்டம், வளையம் மாற்றுதல், அஞ்சல் ஓட்டம், தடைதாண்டல், சாக்கோட்டம் மற்றும் பந்துப் பரிமாற்றம் உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இடைவேளை நிகழ்வாக பாடசாலை மாணவிகளின் இசை நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்து பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சங்கீதக் கதிரைப் போட்டி நடைபெற்றது.
ஸ்கோக்ற்றவற் இல்லம், தம்பையா இல்லம், கிறீடி இல்லம், ஹோன்பி இல்லம் மற்றும் லைத் இல்லங்கள் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம், மற்றும் நான்காம் மற்றும் இடங்களைப் பெற்றுக்கொண்டன.
இறுதியாக போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக