திங்கள், 4 ஏப்ரல், 2011

அல்வாய் றோ.க.த.க பாடசாலை


அல்வாய் றோ.க.த.க பாடசாலை மெய்வல்லுனர் போட்டி: சென்ஜேம்ஸ் வென்றது!

- விதுரன் - யாழ் அல்வாய் வடக்கு றோமன் கத்தோலிக்க தமிழ் கழவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு (16.2.2011) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் இ.இராசதுரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக பருத்தித்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் பா.இராகுநாதனும், சிறப்பு விருந்தினராக அல்லவாய் வடமத்தி கிராம சேவையாளர் இ.புலேந்திரனும் கலந்துகொண்டனர்.
பாண்ட் வாத்திய இசையுடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இறைவணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து தமிழ் மொழி வாழ்த்து இசைக்கப்பட்டு  ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அணிநடையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இதில், ஓட்டம், உருவம் பொருத்துதல், பந்து கடத்துதல், நண்டோட்டம், கொடி அஞ்சல் மற்றும் பலூன் உடைத்தல் உட்பட பல விளையாட்டுகள் நடைபெற்றன.
சென்ஜேம்ஸ் இல்லம், சென்ஜோன்ஸ் இல்லம் மற்றும் சென்பீற்றர் இல்லங்கள் முறையே முதலாம் இடத்தையும், ஏனைய இரண்டு இல்லங்களும் இரண்டாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.
இறுதியாக போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக