திங்கள், 4 ஏப்ரல், 2011

விக்ரோறியாக் கல்லூரி


யாழ் விக்ரோறியாக் கல்லூரியின் மெய்வல்லுனர் போட்டி

- கோபி, பாலகுமார் - யாழ் விக்ரோறியாக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று புதன்கிழமை காலை 1 மணிக்கு (9.2.2011) கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் வ.சிறிகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினர்களாக தெல்லிப்பளை கோட்டக் கல்விப் பணிப்பாளர் க.கைலாசநாதனும், யாழ் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி ஆசிரியர் திருமதி கைலாசநாதனும், சிறப்பு விருந்தினராக சங்கானை கோட்டக் கல்விப் பணிப்பாளர் துரை எங்கரசும், கௌரவ விருந்தினராக யாழ் விக்ரோறியாக் கல்லூரியின் ஓய்வு நிலை ஆசிரியர் சுதந்திராதேவி தங்கராசாவும் கலந்துகொண்டனர்.
விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தேசியக்கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து இல்லங்களின் தலைவர்களினால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.
இதன் பின்னர் பிரதம விருந்தினர் கைலாசநாதன் விளையாட்டுக்களை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இல்ல மெய்வல்லுனர் போட்டிகளில் செல்லப்பா இல்லம், சிவபாத சுந்தரணார் இல்லம், கனகரத்தினம் இல்லம் மற்றும் விலோபி இல்லங்கள் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.
இறுதியாக போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்க கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில், கல்லூரி முதல்வர் வ. சிறிகாந்தன், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக